அமித்ஷா சென்னை வருகை அலறும் கட்சிகள்

சுமார் ஓராண்டிற்கு பிறகு அமித்ஷா சென்னை வர உள்ளது பாஜக தலைவர்களை மட்டும் அல்லாமல் தமிழக அரசியல்களத்தை உற்றுநோக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சரும் அப்போதைய பாஜக தலைவருமான அமித்ஷா வந்திருந்தார். அதுதான் பாஜக தலைவரான பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியாக அமித் ஷா மேற்கொண்ட முதல் பயணமாகும். அதற்குமுன்னர் பாஜக தலைவராக இருந்தபோது தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட அமித் ஷா சென்னை பக்கம் வரவில்லை. ஒருமுறை அவர் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கடந்தமுறை சென்னை வந்தபோது கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போத அந்த ஆலோசனை பெரியளவில் எந்த முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அமித் ஷாவின் வருகை துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கு மேலும் அந்தவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்தார். இதனால் அமித்ஷா சென்னையில் நடத்திய ஆலோசனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் இந்த முறை அப்படிஇல்லை விரைவில் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டும் பாஜக படுதோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலிலும் இதேகூட்டணி தான் நீடிக்குமா என சந்தேகம் நிலவுகிறது.

பாஜகவை பொறுத்தவரை அடுத்தஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இவற்றில் தமிழகம்தவிர்த்து மற்ற மாநிலங்களான மேற்குவங்கம், அருணாச்சல், ஒடிசா மற்றும் கேரளாவில் தனித்தே களம்காண உள்ளது. மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. அருணாச்சல் பிரதேசத்திலும் பாஜக வெற்றிக்கொடி நாட்டிவிடும்.

ஆனால் கேரளா மற்றும் தமிழகம்தான் பாஜகவிற்கு மிகப்பெரிய சவால் . தமிழகத்தை பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். எனவே கூட்டணி வியூகத்தை இறுதி செய்யவே அமித்ஷா சென்னை வர உள்ளதாக கூறுகிறார்கள். சென்னையில் அவர் பாஜக முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...