சென்னை:அரசியல் நாகரீகம் கருதி கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: சென்னையில் நடைபெறும் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இருக்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவில் பங்கேற்கும் படி தொலைபேசி மூலம் என்னை அழைத்துள்ளார்.
கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பா.ஜ., பங்கேற்கிறது. கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது பிடிக்க வில்லை இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |