விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும்நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப் பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை  தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள்செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரிமைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாய குழுக்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதனால், போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்துவருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா என பாஜக மூத்த தலைவரும், அரியானா வேளாண் மந்திரியுமான ஜேபி டலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேபி டலால் கூறியதாவது:-

வேளாண்சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் நினைக்கிறார்கள் என்றால் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். ஒருவருடமோ, இரண்டு வருடமோ, மூன்று வருடமோ காத்திருக்க வேண்டும்.

இந்த சட்டங்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டத்தில் மாற்றம்வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கும்போது, நீங்கள் அதைசாப்பிட தயாராக இல்லை. மேலும், அதைசாப்பிட்டால் இறந்துவிடுவோம் என கூறுகிறீர்கள். நீங்கள் இப்படி முடிவுகளை எடுக்கக் கூடாது.

இது விவசாயிகளை பற்றியதல்ல. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரிநாடுகள் இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டும் என நினைக்கின்றன.

என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...