விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும்நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப் பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை  தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள்செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரிமைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாய குழுக்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதனால், போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்துவருகிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா என பாஜக மூத்த தலைவரும், அரியானா வேளாண் மந்திரியுமான ஜேபி டலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேபி டலால் கூறியதாவது:-

வேளாண்சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் நினைக்கிறார்கள் என்றால் முடிவுக்காக காத்திருக்கவேண்டும். ஒருவருடமோ, இரண்டு வருடமோ, மூன்று வருடமோ காத்திருக்க வேண்டும்.

இந்த சட்டங்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டத்தில் மாற்றம்வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கும்போது, நீங்கள் அதைசாப்பிட தயாராக இல்லை. மேலும், அதைசாப்பிட்டால் இறந்துவிடுவோம் என கூறுகிறீர்கள். நீங்கள் இப்படி முடிவுகளை எடுக்கக் கூடாது.

இது விவசாயிகளை பற்றியதல்ல. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எதிரிநாடுகள் இந்தியாவை நிலைகுலைய வைக்கவேண்டும் என நினைக்கின்றன.

என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

பிரதமர் மோடியின் புதிய அணுகுமு� ...

பிரதமர் மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22ம் தேதி ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...