தியானத்துக்குரிய ஆசனங்கள்

 பத்மாசனம்
தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் சிறந்த ஆசனமாகும். வலது காலை மடித்து இடது தொடைச் சந்திலும் வையுங்கள். இரண்டு முழங்கால்களும் தரையைத் தொட வேண்டும். நிமிர்ந்து இருங்கள். பார்வை புருவ மத்தியில் நிற்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.

 

புத்தர் எப்போதும் பத்மாசனத்தில்தான் இருப்பார். தாமரை மலரைப் போன்ற ஆசனம் இது. தாமரை ஏழு இதழ்களைக் கொண்டது. ஏழு, தெய்வீக எண் என்பதால் தாமரையைத் தெய்வீக மலராகப் போற்றுகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆசனத்துக்கு குறைந்த சக்தியே போதும்.

பத்மாசனத்தில் நிமிர்ந்து உட்காரும்போது நமது உடலைப் பூமியோடு ஒரே சீராகப் பரப்பி வைக்கிறோம், அப்பொழுது புவி ஈர்ப்பு சக்திக்கு வேலை கிடையாது.

நம் கைகளும் கால்களும் ஒரே தொடர்பில் இருப்பதால் நம் உயிர்சக்தி வெளியே போகாமல் உள்ளேயே வளம் வருகிறது. இதனால் வியாதியை, பிரச்சனையை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கிறது. உரை நிகழ்த்துபவர்கள் பத்மாசனத்தில் இருந்து நிகழ்த்தினால், அறிந்த தகவல்களை எளிதில் உதாரணமாகக் கூறலாம்.

பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி செய்வதும் சிறந்தது. பத்மாசனத்தில் ஒரு வட்டத்திற்குள் உட்கார்ந்திருக்கிறோம். எனவே, சக்தி வட்டம் வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது. செயல்படுகிறது. இதனால் சக்தி வெளியே செல்வதில்லை. அதனால், தியானம் செய்பவர்கள் சக்தியை எளிதில் புதிப்பித்துக் கொண்டு விடுகிறார்கள்.

நன்றி : பானுகுமார்

One response to “தியானத்துக்குரிய ஆசனங்கள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...