100-வது கிசான் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டுமடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும்வகையிலும் கிசான்ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

முதல் கிசான்ரெயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இந்தரெயில் மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் இருந்து பீகாரின் தானாபூர் வரை இயக்கப்பட்டது. பின்னர் முசாபர்பூர்வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளின் வரவேற்பைப் பொருத்து நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் கிசான்ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அவ்வகையில் விவசாயிகளுக்கான 100-வது கிசான்ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார். மகாராஷ்டிராவின் சங்கோலாவில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் வரை இயக்கப்படும் இந்த ரெயில்சேவை இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், ரெயில்வேமந்திரி பியூஷ் கோயல் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள கோடிகணக்கான விவசாயிகளுக்கு எனதுவாழ்த்துக்கள். கொரோனா பெருந்தொற்று சவால் இருந்தபோதிலும், கிசான் ரெயில்சேவை கடந்த நான்குமாதங்களில் விரிவடைந்து அதன் 100 வது ரயிலை இப்போது பெற்றுள்ளது. கிசான்ரயில் சேவை விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒருபெரிய படியாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...