புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா

‘‘புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்பாரத்) உருவாக்கத்துக்கு அடிப்படை தாரகமந்திரங்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐஐஎம் கல்விமையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மேலும் கூறியதாவது:

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ஒருங்கிணைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றுடன் மாறிவரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை ஏற்கும் நிர்வாகமும் மிக அவசியம். பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில் தொழில்நுட்பத்துக்கு மிகமுக்கிய பங்கு உள்ளது. டிஜிட்டல் இணைப்பு மூலம்தான் விரைவான வளர்ச்சியை இந்தியா எட்டமுடியும். அதற்கு நிர்வாக ரீதியில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் உலகளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா முன்னேற முடியும்.

தொழில்நுட்ப நிர்வாகம் என்பது மனிதவள நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும். கடந்த சிலஆண்டுகளாக மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களால் உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனாவைரஸ் பரவலை இந்தியாவால் திறம்பட கையாள முடிந்தது.

உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேசளவில் பிரபலப்படுத்த சிறந்த நிர்வாகமும், தொழில்நுட்பமும் அவசியம். இதை இளைய தலைமுறையினர் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டால், நாடு அதன் இலக்கை எட்டமுடியும்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் அமையவுள்ள ஐஐஎம் வளாகம் இம்மாநிலத்துக்கு புதிய அடையாளத்தை நிச்சயம் ஏற்படுத்தும். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் பாரம்பரிய தொழிலான கைத்தறி உள்ளிட்ட பிறதொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...