புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா

‘‘புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்பாரத்) உருவாக்கத்துக்கு அடிப்படை தாரகமந்திரங்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐஐஎம் கல்விமையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மேலும் கூறியதாவது:

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ஒருங்கிணைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றுடன் மாறிவரும் சூழலுக்கேற்ப மாற்றங்களை ஏற்கும் நிர்வாகமும் மிக அவசியம். பிராந்தியங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதில் தொழில்நுட்பத்துக்கு மிகமுக்கிய பங்கு உள்ளது. டிஜிட்டல் இணைப்பு மூலம்தான் விரைவான வளர்ச்சியை இந்தியா எட்டமுடியும். அதற்கு நிர்வாக ரீதியில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் உலகளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா முன்னேற முடியும்.

தொழில்நுட்ப நிர்வாகம் என்பது மனிதவள நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும். கடந்த சிலஆண்டுகளாக மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களால் உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனாவைரஸ் பரவலை இந்தியாவால் திறம்பட கையாள முடிந்தது.

உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேசளவில் பிரபலப்படுத்த சிறந்த நிர்வாகமும், தொழில்நுட்பமும் அவசியம். இதை இளைய தலைமுறையினர் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டால், நாடு அதன் இலக்கை எட்டமுடியும்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் அமையவுள்ள ஐஐஎம் வளாகம் இம்மாநிலத்துக்கு புதிய அடையாளத்தை நிச்சயம் ஏற்படுத்தும். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் பாரம்பரிய தொழிலான கைத்தறி உள்ளிட்ட பிறதொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...