78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரை வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதிபலிப்பு -அமித் ஷா

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு, நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “78-வதுசுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்சார்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மருத்துவக் கல்வி விரிவாக்கம், தொழில்துறை உற்பத்தி மற்றும் ‘இந்தியாவில் வடிவமைப்பு’ மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற கருப்பொருள்களை எடுத்துரைத்த மோடியின் உரை, கடந்த 10 ஆண்டுகளின் வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. இந்த உரையைக் கேட்டு, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ”

“பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உரை, அடிவானத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய பரந்த பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் சக்தியை இந்தியாவிற்கு ஏற்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பாடத்திட்டங்களை திருத்துவதன் மூலம் சுய மாற்றத்திற்கான பயணத்தை இந்தியா வகுத்துள்ளது. இது குடிமக்களால் இயக்கப்படும் நிர்வாகத்துடன் கூடிய புதிய இந்தியா. 140 கோடி குடிமக்களும் நிச்சயமாக மகத்துவம், செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உறுதியாக நம்பும் புதிய இந்தியா இது என்று திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...