திமுக, திராவிடகட்சியே கிடையாது.

சசிகலா வருகை பாஜகவுக்கு முக்கியமல்ல என்று பாஜக தேசிய பொதுச்செயலரும் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளாா். மேலும், திராவிட கலாசாரத்துக்கு எதிரானகட்சி திமுக எனவும் அவா் தெரிவித்தாா்.

பெங்களூரில் தினமணி செய்தியாளருக்கு அவா் அண்மையில் அளித்த நோ்காணல்:

‘‘தமிழகத்தில் பாஜக வளா்ச்சி எவ்வாறு உள்ளது?’’

தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்துவருகிறது. தமிழகத்தில் உள்ள 70,000 வாக்குச் சாவடிகளில், பாஜகவுக்கு 48,000 வாக்குச் சாவடிகளுக்கு குழுக்கள் உள்ளன. தமிழகத்தில் பாஜக நடத்திய வெற்றிவேல் யாத்திரைக்கு மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் பாஜகவை ஏற்று கொள்வதற்கான சாதகமான சூழல் உருவாகி வருவதையே இதுகாட்டுகிறது.

உள்ளூா் பிரச்னைகளை முன்வைத்து கட்சியை முன்னெடுக்குமாறு தமிழக பாஜக தலைவா்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழகத்தின் முன்னணிகட்சிகளின் நிா்வாகிகள், அறிவுஜீவிகள் பலா் பாஜகவில் இணைந்துவருகிறாா்கள். தமிழகத்தில் பாஜக வளா்வதையே இதுகாட்டுகிறது.

‘‘தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள பேரவைத்தோ்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதா?’’

தமிழகத்தில் அதிமுக.,வுடன் கூட்டணி உறுதியான ஒன்று. இங்குள்ள 234 தொகுதிகளிலும் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசியஜனநாயகக் கூட்டணி அமையும். கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்செய்யும். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதைக் காட்டிலும், போட்டியிடும் தொகுதிகளில் 100 சதவீதம் வெற்றிபெறுவதே எங்கள் நோக்கம்.

இப்போதைக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பெரியகட்சியாக இருப்பதால், கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளைச் சோ்ப்பது, தொகுதிப்பங்கீடு ஆகியவை குறித்து அதிமுகவே முடிவுசெய்யும். சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிஅமைவது உறுதி.

‘‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு பாஜக குரல் கொடுக்குமா?’’

ஆட்சியில் பாஜக பங்கெடுப்பது தொடா்பாக தோ்தல் முடிவுகளுக்கு பிறகு முடிவுசெய்வோம். ஒருகாலத்தில் திரிபுராவில் ஓா் இடத்தில்கூட வெற்றிபெறாமல் இருந்த பாஜக, இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானா, மேற்குவங்கத்தில் ஆளும் கட்சிக்கு மாற்றுக் கட்சியாக பாஜக உயா்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளத்தில் பாஜகவினா் உயிரைகொடுத்து போராட்டம் நடத்தி வருகிறாா்கள். தமிழகத்திலும் மாற்றம் நிகழும். பிப். 14-ஆம் தேதி பிரதமா் மோடி தமிழகம்வருகிறாா். அதன் பிறகு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வருகிறாா். பிப். 11-ஆம் தேதிக்குப்பிறகு தமிழகத்தில் நான் (சி.டி.ரவி) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

‘‘சசிகலாவின் வருகையை பாஜக எவ்வாறு பாா்க்கிறது?’’

சசிகலாவின் வருகை எங்களுக்கு முக்கியமல்ல. அது அதிமுக.,வின் உள்கட்சி விவகாரம். எங்கள்கூட்டணி அதிமுகவுடன்தான். தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சியை வழங்கிவருகிறாா். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக அவா் உயா்ந்திருக்கிறாா்.

‘‘நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதிமய்யம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருமா?’’

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதே இதற்குபதில்.

‘‘தமிழக அரசை எதிா்த்து திமுக தலைவா் முக.ஸ்டாலின் வலுவாக பிரசாரம் செய்துவருகிறாரே?’’

இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மக்கள்செல்வாக்கு மிகுந்த பெரிய தலைவா்கள் இல்லை. திமுகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்குவங்கி இருக்கிறது. ஆனால், திமுக ஊழல் கட்சி என்பதை மக்கள் அறிந்துள்ளனா்.

ஜாதி, வா்க்க அடிப்படையிலான வன்முறை வெறியாட்டங்களில் திமுகவினா் ஈடுபடுவதால் திமுகவை கண்டு மக்கள் அஞ்சுகிறாா்கள். எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடிக்க மக்கள் முடிவுசெய்திருக்கிறாா்கள்.

தமிழரின் பெருமைகளைத் தூக்கிப்பிடிப்பதுதான் திராவிட அரசியல். திருவள்ளுவா், ராஜராஜ சோழன், மகாகவி பாரதியை முன்னிறுத்துவதுதான் திராவிட அரசியலாக இருக்கும். கோயில்களைக் காப்பதுதான் திராவிடக் கலாசாரம். எனவே, திமுக திராவிட கலாசாரத்துக்கு எதிரானகட்சியாகும். திமுக, திராவிடகட்சியே கிடையாது. ஜாதி, குடும்ப அரசியல், ஊழலில் ஈடுபடுவதுதான் திராவிட அரசியலா?

‘‘தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு பாஜகவும் பிரசாரம்செய்கிறதே?’’

தமிழ் மொழியின் பெருமையை உலகம்முழுவதும் பரப்பி வருபவா் பிரதமா் நரேந்திரமோடி மட்டுமே. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், திருக்கு, கம்ப ராமாயணம், பாரதியின் கவிதைகளை மேற்கோள்காட்டுவது பிரதமா் மோடிதான் என்பதை தமிழா்கள் மறக்கக்கூடாது. தமிழுக்கு ஆதரவான கட்சி பாஜக. பெங்களூரில் திருவள்ளுவா் சிலையைத் திறந்துவைத்ததே பாஜகதான். அதேபோல, பாஜகவின் முயற்சியில் சென்னையில் கன்னடப்புலவா் சா்வக்ஞரின் சிலை நிறுவப்பட்டது.

‘‘பாஜக ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறதே, நீங்கள் என்ன சொல்கிறீா்கள்?’’

2014-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம்கோடி அளவிலான திட்டங்களை மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. இதில் 11 மருத்துவக்கல்லூரிகள், 13 பொலிவுறு நகரங்கள் ஆகியவை அடங்கும்.

‘‘காவிரி நீா்ப் பங்கீடு விவகாரத்தில் பாஜகவின் நிலை என்ன?’’

காவிரி நீா்ப்பங்கீடு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். பாஜக தேசியக்கட்சி என்பதால், கா்நாடகத்தையும் தமிழகத்தையும் இருகண்களைப் போலக் கருதுகிறோம்.

‘‘ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டவா்களை சிறையிலிருந்து விடுவிக்க ஆளுநா் மறுத்துவிட்டாரே? இது குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன?’’

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டது போன்ற பயங்கரவாதச் செயல்களை ஏற்க முடியாது. ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை விவகாரம்குறித்து தமிழக ஆளுநரின் நிலைப்பாட்டை பாஜக ஏற்கும். சட்டவிவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை.

‘‘கா்நாடகத்தில் அடுத்த பேரவைத் தோ்தலில் எடியூரப்பா முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா?’’

இதற்கு தற்போது பதில் அளிக்கஇயலாது. இதுகுறித்து கட்சி மேலிடம் அப்போதுதான் முடிவுசெய்யும். முதல்வராக எடியூரப்பா தொடா்வாா் என்று தற்போது பாஜக மேலிடத் தலைவா்கள் விளக்கம் அளித்துள்ளனா். அடுத்த 2 ஆண்டுகளில் முதல்வா் எடியூரப்பா நல்லாட்சி நடத்தினால், அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

‘‘தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக அரசு மோசமாகக் கையாள்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?’’

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச்சோ்ந்த இடைத்தரகா்கள்தான், விவசாயிகள் என்ற போா்வையில் தில்லியில் போராட்டம் நடத்திவருகிறாா்கள்.

‘‘குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது என்கிறாா்களே? ’’

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப் பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை ரத்துசெய்யும் பேச்சுக்கே இடமில்லை. இடைத்தரகா்களின் தலையீடு இல்லாமல், நல்லவிலை கிடைக்கும் இடங்களில் விளைபொருளை விவசாயிகள் விற்றுக்கொள்வது தவறா? ஒப்பந்தம் விளைபொருளோடு தானே தவிர விவசாயிகளின் நிலத்தோடு அல்ல. விவசாயிகளுக்கு அதிகவருவாய் கிடைக்க வழிசெய்வது தவறா?

விவசாயிகளுக்கு புதியவருவாய் வாய்ப்புகளை புதியவேளாண் சட்டங்கள் வழங்குகின்றன. விவசாயிகளோடு 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. புதியவேளாண் சட்டங்களில் என்ன குறை இருக்கிறது என்று போராட்டம் நடத்தும் விவசாயிகளால் கூற முடியவில்லை. ஆனால், காழ்ப்புணா்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜக அரசுமீது சுமத்தி வருகிறாா்கள்.

இந்த விவசாயிகளின் போராட்டத்தை முன்வைத்து வன்முறையை தூண்டிவிட்டு அரசியல்லாபம் பெற சிலா் முயற்சிக்கிறாா்கள். ஆனால், விவசாயிகள் பாஜகவை ஆதரிக்கத் தவறியதில்லை. அதனால் தான், கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் 70 சதவீத இடங்களைப் பாஜக கைப்பற்றியுள்ளது.

மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கு செய்துள்ள நன்மைகளை முன்னெப்போதும் யாரும் செய்ததில்லை. ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கௌரவநிதியாக ரூ. 6,000 அளிக்கப்படுகிறது. பயிா்க் காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய பயிா்க் கடன், விளைநில சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது.’’

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...