ஸ்டாலினுக்கு ‘குட்டி மோடி’ போல ஆக ஆசை இருக்கிறது

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டுஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பாஜக சார்பில், சென்னை கீழ்ப் பாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜகவினர் போல, எந்தகட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. 2014 லோக் சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, பாஜக ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது பாஜகவின் சிறப்பான சமூக நீதிக்கொள்கைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதிகூட, திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூகநீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின் பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பிவருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒருபழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் முக.ஸ்டாலினுக்கு காய்ச்சல்வந்துவிட்டது.

சமூகநீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம்இருக்கிறதா? தனிமனிதனுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்றபின் சாதனை நாடாக மாற்றிகாட்டியவர் நரேந்திர மோடி. புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, ‘குட்டிமோடி’ போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான மக்கள் சேவையாற்ற வேண்டும்.

திமுகவைப் பொறுத்தவரை கட்சி தான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வர வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்துவந்தார். தமிழகத்தில், ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் துணிவு இருக்கிறதா? வரும் லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பாஜகவுக்கு 25 எம்.பி.,க்கள் கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்தமாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரைமலரும். இந்த மண்ணில் என்றென்றும் பாஜக ஆட்சி தொடரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...