பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது

பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆனகட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப் படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும்முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “பாஜக தேசிய கட்சி, அந்தகட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறியுள்ளனர்” என்றார்.

தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்று பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தபேச்சு அண்ணாமலைக்கு பதில் கொடுக்கும் விதமாகவே இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவுசெய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்புகொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்” என்று சூடாக பதில் கொடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை மீண்டும் சட்ட சபையில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இனி ஆளுநர் திரும்பிஅனுப்ப வாய்ப்பு இல்லை. கையெழுத்து போடத்தான்போகிறார். ஏனெனில் அதுதான் அரசியல் அமைப்பு சட்டம். ஆனால் ஒரேபயம் ஒரு முறையற்ற மசோதா பாலிட்டி மசோதா மீண்டும் கோர்ட்டிற்கு போய் தடையாகி மறுபடும் பிரச்சினை ஆகத்தான் போகிறது. ஆளுநரை பொறுத்தவரை கையெழுத்துபோட வேண்டிய நிர்பந்தம் மட்டும் இல்லை. கட்டாயமும் இருக்கிறது அதுதான் அரசியல் அமைப்பு சட்டம்.

“டெல்லி தலைமையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பாஜக என்பது தொண்டர்களின்கட்சி. மற்ற கட்சிபோல ஒரு தலைவர் வந்து 50 வருஷம் 60 வருஷம், 70 வருஷம் என்று இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்புகொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்.

இந்தக் கட்சியில் ஒன்மேன்ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும்முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதேநேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக்கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும். என்னை பொறுத்த வரை மாநில தலைவர் என்ற முறையில் எதுவாக இருந்தாலும் பாஜக வலிமை பெறவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...