நெல்லை தொகுதியின் அமமுக மற்றும் சமகவேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் ஆனதை அடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக.,வினர் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் போட்டியிடும் அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பால்கண்ணனின் வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் 3 பேர் அந்ததொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிதெரிவித்தார்.
அதேபோல் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சியின் சமத்துவ மக்கள்முன்னேற்ற் கழகத்தின் வேட்பாளர் அழகேசன் என்பவரின் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல்அதிகாரி தெரிவித்தார். அவர் 10 நபர்களை முன்மொழிவு செய்வதற்குபதிலாக 8 நபர்களை மட்டுமே முன்மொழிந்தார் என்பதால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப் பட்டது.
இதனையடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அமமுக வேட்பாளர் பால்கண்ணன் தேவர் சமுதாய ஓட்டையும், சமத்துவ மக்கள்கட்சி வேட்பாளர் அழகேசன் நாடார் சமுதாய ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற நிலையில் அவர்கள் இருவரது வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் தற்போது நயினார் நாகேந்திரன் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |