நெல்லை அமமுக, சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் வெற்றி உறுதி

நெல்லை தொகுதியின் அமமுக மற்றும் சமகவேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் ஆனதை அடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக.,வினர் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் போட்டியிடும் அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பால்கண்ணனின் வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் 3 பேர் அந்ததொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிதெரிவித்தார்.

அதேபோல் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சியின் சமத்துவ மக்கள்முன்னேற்ற் கழகத்தின் வேட்பாளர் அழகேசன் என்பவரின் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல்அதிகாரி தெரிவித்தார். அவர் 10 நபர்களை முன்மொழிவு செய்வதற்குபதிலாக 8 நபர்களை மட்டுமே முன்மொழிந்தார் என்பதால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப் பட்டது.

இதனையடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அமமுக வேட்பாளர் பால்கண்ணன் தேவர் சமுதாய ஓட்டையும், சமத்துவ மக்கள்கட்சி வேட்பாளர் அழகேசன் நாடார் சமுதாய ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற நிலையில் அவர்கள் இருவரது வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் தற்போது நயினார் நாகேந்திரன் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...