காங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், காங்கிரஸ்கட்சி அரசியல்செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ., தலைவர் நட்டா எழுதியகடிதத்தில் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நட்டா கூறி உள்ளதாவது: உங்களது தலைமையில், உங்கள்கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்தவேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறி கேரளாவில் மிகப் பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டி விட்ட பின்னர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என பேசுகிறீர்கள்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவதுவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்க வில்லை.

இரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டுவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்தவேண்டும். பொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்தவேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல்செய்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்புமருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால், காங்கிரஸ்கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.பார்லிமென்டிற்கு புதியகட்டடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் நட்டா கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...