ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டே வளர்கிறோம்

பாஜகவின் சித்தாந்தம் என்பது தமிழ்மண்ணை சார்ந்ததுதான். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பலலட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிகதேடல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்பதாகத்தான் கோயிலை புண்ணிய தலமாக மக்கள் பார்க்கிறார்கள்.

கிரிவலம்செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கொரோனா பரவலைதடுக்க அரசு விதி வகுத்திருக்கும் போது, அதை பின்பற்றுவது எல்லோருடைய கடமை. ஆர்எஸ்எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய சேவைஅமைப்பு ஆகும். அதற்கு ஈடு எதுவும்கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இசட் பாதுகாப்பில் உள்ளார். அவர் வருகையின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். சாலையில் உள்ள வேகத்தடை போன்றவற்றை தவிர்ப்பார்கள்.

மதுரை மாநகராட்சி துணை ஆணையர் அவருடைய உத்தரவில் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மதுரை எம்.பி. கடிதம் எழுதுகிறார். உடனே, அரசு துரிதநடவடிக்கை எடுக்கிறது. இச்செயல் கண்டனத்துக்குரியது. அரசின் எண்ணங்கள் என்ன என்பதை இதுபிரதிபலிக்கிறது. இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பாஜக கடிதம் எழுதியிருக்கிறது. தவறுசெய்யாத அந்த அதிகாரியை மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்தியஅரசை கண்டிக்கிறோம் என்று கூறுவதில் எந்த முகாந்திரம் கிடையாது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் மட்டும் 41 லட்சம் தடுப்பூசிதான் கொடுக்கவேண்டும். ஆனால், 52 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. தடுப்பூசி கூடுதலாக கொடுக்கப்பட்டது. ஜூலையில் 70 லட்சத்துக்கும் கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். தடுப்பூசி மையங்களில் திமுகவினர் சென்று, டோக்கனைபெற்று, தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு வழங்குகிறார்கள். இதைக் கண்டித்து தான் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியை மத்திய அரசு செய்கிறது. லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என சொல்லி திமுக ஆட்சிக்குவந்தது. ஆனால், சொன்னது போல் குறைக்கவில்லை. முந்தைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் புதிய அரசு சோதனை நடத்துவதெல்லாம் தமிழகத்தில் வாடிக்கைதான். இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், அவர்கள் அரசியலுக்காக சோதனை நடத்தினார்களா என்பது தெரிந்து விடும். அரசு சொல்வதை யெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல் துறையினர் தனது கடமையைச் சரியாக செய்யவேண்டும். மனசாட்சிப்படி செய்ய வேண்டும்”

திருவண்ணாமலையில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...