நீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம்வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.

வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுவிமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

அமெரிக்க அரசின்சார்பில் மூத்த அலுவலர்கள், அமெரிக்காவுக்கான இந்தியதூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மோடியை வரவேற்றனர். இது குறித்து மோடி சுட்டுரை பக்கத்தில், “வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்புஅளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமதுபலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது” என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, தனது நீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திடுவது, முக்கியதிட்டங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்வது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படமும் அவரது சுட்டுரையில் இணைக்கபட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில், மன்மோகன்சிங், பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணங்களின் போது செய்தியாளர்களை சந்திப்பார் என்றுகூறி மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டு, சில புகைப்படங்களை நகலெடுக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பெற்றதிலிருந்து ஏழாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, “அமெரிக்காவுடனான வியூகரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தபடும் என தெரிவித்திருந்தார்.

வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க – இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

ஜோபைடன் நடத்தும் கரோனா உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ்ஷ்ரிங்லா தெரி்வித்திருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...