உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அந்நாட்டின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வாஷிங்டன் சென்றடைந்தார்.

வெள்ளை மாளிகை அருகே உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான, ‘பிளேர் ஹவுஸ்’ல் பிரதமர் தங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று அதிகாலை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக, அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஹிந்து – அமெரிக்கரான துளசி கப்பார்டை பிரதமர் நேற்று சந்தித்துப் பேசினார்.

அதன் பின் தன் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் புலனாய்வுத்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்றுள்ள துளசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா – அமெரிக்கா நட்புறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம்.

அதை மேலும் வலுப்படுத்துவதில் துளசி மிகவும் தீவிரமாக உள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் மோடி – துளசி கப்பார்ட் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...