6 நாள் பயணமாக நாளை (டிச.24 முதல்29 வரை) அமெரிக்கா செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த 6 நாள் பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து, ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய, அமெரிக்க இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் இருக்கும் சவால்களை களைய, உள்ளார்ந்த ஒத்துழைப்பு பாதைகள் விரிவடையும். தனது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரிகளின் மாநாட்டிற்கும் அமைச்சர் தலைமை தாங்குவார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |