இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது

‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது”
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய குறிக்கோளுடன் செயல் பட்டவர் ஆதிசங்கரர், கடவுள் சிவனின் அவதாரம். மனித நேயத்திற்காக அவர் தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம்தருகிறது.

 

2013 ம் ஆண்டு சேதத்திற்கு பிறகு கேதார் நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தார்கள். ஆனால், என்னுள் எழுந்தகுரல் ஓன்று, கேதார்நாத் மீண்டும் மறு கட்டமைக்கப்படும் என எப்போதும் சொல்லி கொண்டிருந்தது. டில்லியில் இருந்தவாறு, கேதார் மறு சீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வுசெய்தேன். டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் இங்கு நடக்கும் வளர்ச்சிபணிகளை ஆய்வு செய்தேன். கேதார்நாத்தை புத்துயிர் பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல வேண்டும்

 

தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்துகொள்ள முடியம். யாத்திரை மூலம் மகிழ்ச்சியுடன் பாரம்பரியமும் கிடைக்கிறது. கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டும். இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது.

 

புத்த கயா உள்ளிட்ட ஆன்மிகதளங்கள் வெளிநாட்டு பயணிகள் ஈர்க்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் காரிடர் திட்டங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது.

 

தற்போது நாடு அதிககுறிக்கோளை வைப்பதுடன், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப் படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.130 கோடி மதிப்பு வளர்ச்சிதிட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...