இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது

‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது”
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய குறிக்கோளுடன் செயல் பட்டவர் ஆதிசங்கரர், கடவுள் சிவனின் அவதாரம். மனித நேயத்திற்காக அவர் தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம்தருகிறது.

 

2013 ம் ஆண்டு சேதத்திற்கு பிறகு கேதார் நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தார்கள். ஆனால், என்னுள் எழுந்தகுரல் ஓன்று, கேதார்நாத் மீண்டும் மறு கட்டமைக்கப்படும் என எப்போதும் சொல்லி கொண்டிருந்தது. டில்லியில் இருந்தவாறு, கேதார் மறு சீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வுசெய்தேன். டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் இங்கு நடக்கும் வளர்ச்சிபணிகளை ஆய்வு செய்தேன். கேதார்நாத்தை புத்துயிர் பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல வேண்டும்

 

தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்துகொள்ள முடியம். யாத்திரை மூலம் மகிழ்ச்சியுடன் பாரம்பரியமும் கிடைக்கிறது. கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டும். இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது.

 

புத்த கயா உள்ளிட்ட ஆன்மிகதளங்கள் வெளிநாட்டு பயணிகள் ஈர்க்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் காரிடர் திட்டங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது.

 

தற்போது நாடு அதிககுறிக்கோளை வைப்பதுடன், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப் படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.130 கோடி மதிப்பு வளர்ச்சிதிட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...