ஆளிவிரையின் மருத்துவக் குணம்

 இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. இதன் இலையைப் பச்சடி செய்து உண்ண மேற்கண்ட குணங்களைப் பெறலாம்.

 

இதன் விதையைப் பொடி செய்து, மருந்தாகப் பயன்படுத்தினால் உடலைத் தேற்றும், மலத்தை இலக்கி சரி செய்யும், காமத்தைப் பெருக்கும், வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வருவார்கள். குழந்தை பெற்றவர்கள் உண்டால் குழந்தைப் பால் பெருகும்.

இதை உண்டால் அஜீரணம், சீதபேதி, அஜீரணப்பேதி இடப்பாட்டி ஈரல் வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல், சரும ரோகம், கபநோய், குசுமரோகம் மூலம் ஆகியவற்றை நீக்கும்.

பால் சுரக்கவும், கருவைக் கரைக்கவும் சுக்கில விருத்திக்கும், தாராளமாய் மலத்தைத் தள்ளவும் உட்சூட்டை தணிக்கவும், உபயோகிக்கலாம்.

மேற்கூறப்பட்ட குணங்களைப் பெற 1 பங்கு விதைப் பொடிக்கு 20 பங்கு நீர் சேர்த்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு விதையைப் பொடிசெய்து 10 பங்கு குளிர்ந்த நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்து நீரை 15 மில்லி முதல் 30 மில்லி வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்து வரலாம்.

விதையைப் பாலில் காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். ஆனால் இளங்கருவைக் கரைத்துவிடும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் கொடுக்க நலமுண்டாகும்.

விதையைப் பாலில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து லேகியம் செய்து கழற்சிக்காய் அளவு காலை, மாலை தினமும் உட்கொள்ள, வயிற்றுப்பொருமல் நீங்கும். பாலைச் சுரப்பிக்கும், சுக்கிலத்தைப் பெருக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...