ஆளிவிரையின் மருத்துவக் குணம்

 இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. இதன் இலையைப் பச்சடி செய்து உண்ண மேற்கண்ட குணங்களைப் பெறலாம்.

 

இதன் விதையைப் பொடி செய்து, மருந்தாகப் பயன்படுத்தினால் உடலைத் தேற்றும், மலத்தை இலக்கி சரி செய்யும், காமத்தைப் பெருக்கும், வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வருவார்கள். குழந்தை பெற்றவர்கள் உண்டால் குழந்தைப் பால் பெருகும்.

இதை உண்டால் அஜீரணம், சீதபேதி, அஜீரணப்பேதி இடப்பாட்டி ஈரல் வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல், சரும ரோகம், கபநோய், குசுமரோகம் மூலம் ஆகியவற்றை நீக்கும்.

பால் சுரக்கவும், கருவைக் கரைக்கவும் சுக்கில விருத்திக்கும், தாராளமாய் மலத்தைத் தள்ளவும் உட்சூட்டை தணிக்கவும், உபயோகிக்கலாம்.

மேற்கூறப்பட்ட குணங்களைப் பெற 1 பங்கு விதைப் பொடிக்கு 20 பங்கு நீர் சேர்த்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு விதையைப் பொடிசெய்து 10 பங்கு குளிர்ந்த நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்து நீரை 15 மில்லி முதல் 30 மில்லி வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்து வரலாம்.

விதையைப் பாலில் காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். ஆனால் இளங்கருவைக் கரைத்துவிடும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் கொடுக்க நலமுண்டாகும்.

விதையைப் பாலில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து லேகியம் செய்து கழற்சிக்காய் அளவு காலை, மாலை தினமும் உட்கொள்ள, வயிற்றுப்பொருமல் நீங்கும். பாலைச் சுரப்பிக்கும், சுக்கிலத்தைப் பெருக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...