சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர்

”அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வரலாற்று ஆய்வாளர் விக்ரம் சம்பத் எழுதிய, ‘திப்பு சுல்தான்: தி சாகா ஆப் மைசூர் இன்டரெக்னம் 1761 – 1799’ என்ற புத்தகத்தை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மாற்றுக் கண்ணோட்டங்கள் மற்றும் சமநிலையான கருத்துக்கள் தோன்றுவதற்கு ஊக்கமளித்துள்ளன.

நாம் ஓட்டு வங்கி சிறையில் சிக்கிக் கொள்ளவில்லை. மேலும், சங்கடத்துக்குரிய உண்மைகளை வெளிக்கொண்டு வருவது அரசியல் ரீதியாக தவறு அல்ல. திறந்த மனதுடன் கூடிய புலமையும், உண்மையான விவாதமும் பன்மைத்துவ சமூகம் மற்றும் துடிப்பான ஜனநாயகம் உருவாக மையமாக உள்ளன.

திப்பு சுல்தானை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் அவர் ஒரு சிக்கலான மனிதர். ஒருபுறம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததில் முக்கிய நபராக அவர் புகழ் பெற்றார்.

இந்திய தீபகற்ப தலைவிதியைப் பொறுத்தவரை அவரது தோல்வியும், மரணமும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படலாம் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அவர் பாதகமான உணர்வுகளை துாண்டியதாக மைசூரு, கூர்க் மற்றும் மலபாரின் சில பகுதிகளில் கருதப்படுகிறது. சமகால வரலாறு என்பது நல்லனவற்றை கூறுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதேநேரம் பாதகங்களையும் தவிர்க்க தவறுவதில்லை.

அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது.இந்த புத்தகம் திப்பு சுல்தான் பற்றிய உண்மைகளை பேசுவதோடு, வாசகர்களின் சொந்த முடிவுக்கும் இடம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...