2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்

2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவரும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக வானதி சீனிவாசனின் மக்கள்சேவை மையம் சார்பில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டுவயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச பசும்பால் வழங்கும் அமுதம் திட்டம் தொடக்கவிழா நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியமகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன் இலவசபசும்பால் வழங்கும் அமுதம் திட்டத்தை துவக்கி வைத்து தாய்மார்களுக்கு பசும்பால் வழங்கினார். மேலும் பாஜக சார்பில் பெண்களுக்கான இலவச நாப்கின்வழங்கும் இதம் திட்டத்தையும் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில்பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவரும் எனவும், அதற்கான முதல்விதை கோவை தெற்குத் தொகுதியில் போடப் பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் கோவை பாஜகவின் இரும்புக் கோட்டையாகமாறும் என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு சார்பில் பெண்கள் தேவைசார்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு சேவை செய்யவேண்டும் எனவும் கூறினார். சேவைக்கு பிரதமர் எங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார் என்றும், கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏக்களை உருவாக்க அனைவரும் உதவிடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...