இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது

இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது என பிரதமர் மோடி டென்மார்க் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார்.

பின்னர் டென்மார்க் சென்றார் மோடி. அவருக்கு டென்மார்க் பிரதமர் மேட்பிரெட்ரிக்சன் வரவேற்றார். தொடந்து டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இருவரும் டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர்.

பின்னர் டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் பேசியது, எனது நண்பர், பிரதமர் மோடி , டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான்மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்கமகிழ்ச்சி என்றார்.

தொடர்ந்து டென்மார்க்வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது, இந்தியர்களான உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மேட் பிரெட்ரிக்சனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது அறிவியல் அறிவை உலகநாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் வலிமையை தற்போது உலக நாடுகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது. மொழிகள், உணவுகள் வேறாக இருப்பினும் நாம் இந்தியர்கள்தான். இந்தியர்களின் இன்டெர்நெட் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...