மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த புதுச்சேரி

பிரதமரின் ‘அதிவிரைவு சக்தி’ திட்டத்தில் புதுச்சேரி இணைந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்கட்டமைப்பினை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டுகுழுக்கள் ஏற்படுத்த கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்ற தேசிய மாஸ்டர்பிளான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்திட்டம் ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத் தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதற்காக ‘டிஜிட்டல் பிளார்ட் பார்ம்’ துவக்கப்படுகிறது.

இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுவித்து இருந்தது.இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் தற்போது இணைகிறது. இதற்காக புதுச்சேரி உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானில் ஏதேனும் மாற்றங்களை அங்கீகரிப் பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரமளிக் கப்பட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் எட்டுதுறைகளின் செயலர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதேபோல், தொழில் வணிகத் துறைசெயலர் தலைமையில் ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு, தொழில் மற்றும் வணிகத்துறை செயலர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் 12 துறைகளின் இயக்குனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பேற்று செயல்படும்.மேலும், மாஸ்டர் பிளானுக்கு வெளியே உள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை இந்தகுழு கண்காணிக்கும்.

பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டத்தினை வேகப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தஇரண்டு குழுக்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்தந்துள்ளார்.2 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள், 1,600 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் ரயில்கள், எரிவாயு குழாய் நெட்வொர்க்கை 35,000 கி.மீ., வரை இரட்டிப்பாக்குதல், நாட்டில் உள்ள பொருளாதார மண்டலங்களை இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் கதிசக்தி திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எத்தகைய உட்கட்டமைப்பினை உருவாக்கி, தேசிய கதிசக்தி திட்டத்துடன் இணைக்கலாம் என்பதை, ஒருங்கிணைந்த மல்டிமோடல் நெட்வொர்க் திட்டமிடல் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.அத்துடன், மாநிலத்திற்கு தனியாக உட்கட்டமைப்பிற்கான மாஸ்டர்பிளானை உருவாக்கி, உயர்மட்ட குழுவான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல்பெற உள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரமளிக்கப்பட்ட குழு முன்னின்று சமாளிக்கும். விரைவான முடிவெடுத்து பிரச்னைகளை தீர்க்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...