மாநிலங்களில் மின்சார துறை நிலைமை ரொம்ப மோசம்

இந்திய பொருளாதாரம் வேகமானவளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தியாவின் மின்சாரபகிர்மான துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டைஇலக்க அளவில் உள்ளது என நரேந்திர மோடி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மின்சாரபகிர்மானம் அதாவது டிஸ்ட்ரிபியூஷன் துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டைஇலக்க அளவில் உள்ளது, ஆனால் வளர்ச்சி அடைந்தநாடுகள் அனைத்திலும் ஒற்றை இலக்கில்தான் உள்ளது என குறிப்பிட்டு மோடி பேசியுள்ளார்.

அப்படியென்றால் அதிகளவிலான மின்சாரம் வருமானம் ஈட்டமுடியாமல் வீணாகிறது. இதுமட்டும் அல்லாமல் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்திசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்தியாவில் பலமாநிலத்தில் மின்சார வாரியம் சுமார் 1 லட்சம்கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவை தொகையை வைத்துள்ளது. இந்ததொகை மாநில அரசுகள் மின்சாரம் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்நிலையில் நிலுவைதொகை வைத்துள்ள அனைத்து மாநிலத்தின் மின்சார வாரியமும் விரைவில் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும மக்கள் தாங்கள் பயன் படுத்தும் மின்சாரத்திற்கு சரியாக பணம் செலுத்தியபோதும் ஏன் மாநில அரசுகளின் நிலுவை தொகை ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது எனவும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியாவில் மின்சார பகிர்மானம் மற்றும் மின்சாரதுறையின் ஆப்ரேஷன்ஸ் திறன் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த 2021-22 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிதிஉதவியை மோடி சனிக்கிழமை அறிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...