தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம்

இன்னும் சில நாட்களில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்நன்னாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த பெருவிழாவாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து, 15ஆம் தேதி வரை ஒவ்வொரு இல்லங்களிலும் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடிதனை ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும், என்று கேட்டுக் கொண்டும் உள்ளார்

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே இது நடந்திருக்க வேண்டும். ஏனோ இதற்கு 75 வருடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த சுதந்திரதனை பெறத்தான் எண்ணிலடங்காதோர் ரத்தம் சிந்தினர், உயிர் தியாகம் செய்தனர், பலர் சிறை பட்டனர், அதில் சிலர் சிறையிலேயே மாண்டனர்,

இந்த சுதந்திரக் கொடியை ஏற்றத்தான் மகாத்மா காந்தி அகிம்சை வழிப் போராட்டங்களை கண்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதங்களுடன் ஆங்கிலேயனின் நெஞ்சை பிழந்தார். இந்தக் கொடி தனை ஏந்தியதால்தான் வ உ சிதம்பரம் பிள்ளை தனது பெரும் செல்வத்தை இழந்தார், திருப்பூர் குமரன் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகு தேசியக் கொடிதனை நம் இல்லங்களில் ஏற்றுவது நமது கடமை. இந்த சுதந்திரத்தினை பாடுபட்டுத் தேடித் தந்தவர்களுக்கு நாம் செய்யும் பெருமையம் கூட. இன்று இந்தியா முதல்முறையாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியுடன் சுதந்திரத்தை கொண்டாட இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்புமுன்பு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் கொண்டாடப்பட்ட தேசியக்கொடி நிகழ்வு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது குழந்தைகளின் கைகளில் ஏந்தி செல்லும் படங்கள் பல காணக்கிடைக்கிறது

இதுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறும் புதிய இந்தியா. தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம் என்று தனது செயலின் மூலம் முழங்கும் இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...