தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம்

இன்னும் சில நாட்களில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்நன்னாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த பெருவிழாவாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து, 15ஆம் தேதி வரை ஒவ்வொரு இல்லங்களிலும் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடிதனை ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும், என்று கேட்டுக் கொண்டும் உள்ளார்

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே இது நடந்திருக்க வேண்டும். ஏனோ இதற்கு 75 வருடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த சுதந்திரதனை பெறத்தான் எண்ணிலடங்காதோர் ரத்தம் சிந்தினர், உயிர் தியாகம் செய்தனர், பலர் சிறை பட்டனர், அதில் சிலர் சிறையிலேயே மாண்டனர்,

இந்த சுதந்திரக் கொடியை ஏற்றத்தான் மகாத்மா காந்தி அகிம்சை வழிப் போராட்டங்களை கண்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதங்களுடன் ஆங்கிலேயனின் நெஞ்சை பிழந்தார். இந்தக் கொடி தனை ஏந்தியதால்தான் வ உ சிதம்பரம் பிள்ளை தனது பெரும் செல்வத்தை இழந்தார், திருப்பூர் குமரன் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகு தேசியக் கொடிதனை நம் இல்லங்களில் ஏற்றுவது நமது கடமை. இந்த சுதந்திரத்தினை பாடுபட்டுத் தேடித் தந்தவர்களுக்கு நாம் செய்யும் பெருமையம் கூட. இன்று இந்தியா முதல்முறையாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியுடன் சுதந்திரத்தை கொண்டாட இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்புமுன்பு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் கொண்டாடப்பட்ட தேசியக்கொடி நிகழ்வு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது குழந்தைகளின் கைகளில் ஏந்தி செல்லும் படங்கள் பல காணக்கிடைக்கிறது

இதுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறும் புதிய இந்தியா. தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம் என்று தனது செயலின் மூலம் முழங்கும் இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...