தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம்

இன்னும் சில நாட்களில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்நன்னாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த பெருவிழாவாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து, 15ஆம் தேதி வரை ஒவ்வொரு இல்லங்களிலும் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடிதனை ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும், என்று கேட்டுக் கொண்டும் உள்ளார்

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே இது நடந்திருக்க வேண்டும். ஏனோ இதற்கு 75 வருடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த சுதந்திரதனை பெறத்தான் எண்ணிலடங்காதோர் ரத்தம் சிந்தினர், உயிர் தியாகம் செய்தனர், பலர் சிறை பட்டனர், அதில் சிலர் சிறையிலேயே மாண்டனர்,

இந்த சுதந்திரக் கொடியை ஏற்றத்தான் மகாத்மா காந்தி அகிம்சை வழிப் போராட்டங்களை கண்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதங்களுடன் ஆங்கிலேயனின் நெஞ்சை பிழந்தார். இந்தக் கொடி தனை ஏந்தியதால்தான் வ உ சிதம்பரம் பிள்ளை தனது பெரும் செல்வத்தை இழந்தார், திருப்பூர் குமரன் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகு தேசியக் கொடிதனை நம் இல்லங்களில் ஏற்றுவது நமது கடமை. இந்த சுதந்திரத்தினை பாடுபட்டுத் தேடித் தந்தவர்களுக்கு நாம் செய்யும் பெருமையம் கூட. இன்று இந்தியா முதல்முறையாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியுடன் சுதந்திரத்தை கொண்டாட இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்புமுன்பு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் கொண்டாடப்பட்ட தேசியக்கொடி நிகழ்வு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது குழந்தைகளின் கைகளில் ஏந்தி செல்லும் படங்கள் பல காணக்கிடைக்கிறது

இதுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறும் புதிய இந்தியா. தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம் என்று தனது செயலின் மூலம் முழங்கும் இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.