தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம்

இன்னும் சில நாட்களில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்நன்னாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த பெருவிழாவாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து, 15ஆம் தேதி வரை ஒவ்வொரு இல்லங்களிலும் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடிதனை ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும், என்று கேட்டுக் கொண்டும் உள்ளார்

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே இது நடந்திருக்க வேண்டும். ஏனோ இதற்கு 75 வருடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த சுதந்திரதனை பெறத்தான் எண்ணிலடங்காதோர் ரத்தம் சிந்தினர், உயிர் தியாகம் செய்தனர், பலர் சிறை பட்டனர், அதில் சிலர் சிறையிலேயே மாண்டனர்,

இந்த சுதந்திரக் கொடியை ஏற்றத்தான் மகாத்மா காந்தி அகிம்சை வழிப் போராட்டங்களை கண்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதங்களுடன் ஆங்கிலேயனின் நெஞ்சை பிழந்தார். இந்தக் கொடி தனை ஏந்தியதால்தான் வ உ சிதம்பரம் பிள்ளை தனது பெரும் செல்வத்தை இழந்தார், திருப்பூர் குமரன் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகு தேசியக் கொடிதனை நம் இல்லங்களில் ஏற்றுவது நமது கடமை. இந்த சுதந்திரத்தினை பாடுபட்டுத் தேடித் தந்தவர்களுக்கு நாம் செய்யும் பெருமையம் கூட. இன்று இந்தியா முதல்முறையாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியுடன் சுதந்திரத்தை கொண்டாட இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்புமுன்பு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் கொண்டாடப்பட்ட தேசியக்கொடி நிகழ்வு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது குழந்தைகளின் கைகளில் ஏந்தி செல்லும் படங்கள் பல காணக்கிடைக்கிறது

இதுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறும் புதிய இந்தியா. தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம் என்று தனது செயலின் மூலம் முழங்கும் இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...