ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

”நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் அந்த சந்தேகம் தவறு என்பதை நம் ஜனநாயகம் நிரூபித்து வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கீ பாத்’ எனப்படும் மனதில் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே கலந்துரையாடுகிறார்.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் ரேடியோ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில், அவர் கூறியுள்ளதாவது:

வழக்கமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, இப்போது ஒலிபரப்பாவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான நாள்.

நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால், இந்த நிகழ்ச்சி முன்னதாகவே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினம் நமக்கெல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசின் 75வது ஆண்டை நாம் கொண்டாட உள்ளோம்.

நம் நாடு குடியரசு அந்தஸ்து பெற்றது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கப்பட்டதன் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.

இந்த நேரத்தில், பார்லிமென்டின் நிர்ணய சபையில் பணியாற்றிய அம்பேத்கர், ஜனாதிபதியாக பணியாற்றிய ராஜேந்திர பிரசாத், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பை நினைத்து பார்க்க வேண்டும்.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான, ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகும். இந்த நாளில்தான் நம் தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து வரும் தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகள்.

நம் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த சந்தேகங்கள் அனைத்தும் தவறு என்பதை நம் ஜனநாயகமும், தேர்தல் கமிஷனும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. ஏனென்றால், ஜனநாயகத்தின் தாயகம் நம் நாடு தான். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...