இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு

‘ராகுல் காந்தி நடத்தும் நடைப் பயணம் என்பது நடைப் பயணம் என்பதைத்தாண்டி அது ஒரு எண்டர்டைன்மென்ட். இந்த நடைப் பயணத்தினுடைய ரிசல்ட்டை நாம் ஒவ்வொரு தேர்தல்முடிவுகளிலும் பார்க்கிறோம். இந்திய ஒற்றுமை யாத்திரை என்று சொல்கிறார். ஆனால் இந்தியாவை பிரிக்கக்கூடியவர்களை வைத்துக்கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் கடுமையாக ஓடுவது, நடப்பது அவருக்கு நல்ல உடற் பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடன்சென்ற காங்கிரஸ்காரர்களும் நன்றாக ஃபிட் ஆகியிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு இதில் எந்தப்பயனும் இல்லை.

நம்முடைய மத்திய அரசு 2023 டிசம்பர் வரைக்கும் ஏழைகளுக்கான உணவுத்திட்டத்தை மறுபடியும் இரண்டுலட்சம் கோடி ரூபாய் செலவு செய்து நீட்டித்திருக்கிறார்கள். ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நடந்து கொண்டிருந்தது. அதை 2023 டிசம்பர்வரை நீட்டித்துள்ளார்கள். உலகில் எந்த ஒருநாடும் செய்யாததை பிரதமர் மோடி செய்துள்ளார். கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். இதையாவது தமிழகஅரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள்.

போனமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுத்தீர்கள். இந்தமுறை கரும்பு இடம் பெறவில்லை. பனை வெல்லத்தைக் கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இந்நேரம் பனைவெல்லம் உற்பத்தி ஆரம்பித்து இருந்தால் இதனால் விவசாயிகளும் பயன்பெற்று இருப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்பொழுது வெறும்ஆயிரம் ரூபாய் மட்டும் அறிவித்துள்ளீர்கள். எனவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு”

மாநில தலைவர்

அண்ணாமலை 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.