வாய் துர்நாற்றம் குணமாக

 எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 நிமிடம் கழித்து விழுங்க வேண்டும். காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்துவர சரியாகும்.

கரிசலாங்கன்னி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் தினம் ஒன்றாக பருப்புடன் கூட்டு செய்து மதிய உணவுடன் உண்டு வர வேண்டும். அத்துடன் தினம் ஒரு மாதுளம் பழமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர துர்நாற்றம் விலகும்.

இரண்டு எலுமிச்சை அளவு புதினா இலைகளைச் சுத்தம் செய்து அதில் 2 ஏலக்காயை நசுக்கி சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இலைகளையும் ஏலக்காய்த் தூளையும் போட்டுக்காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி ஆறியதும் வடிகட்டி இரண்டு பங்காக்கி காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் வாயில் ஊற்றி 3,4 முறை கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய துர்நாற்றம் சரியாகும்.

ஒரு அங்குல நீளமுள்ள வசம்பை இடித்துத் தூளாக்கி தூளை வாயில்போட்டு சாரத்தை கொஞ்சங் கொஞ்சமாக சப்பி விழுங்க வேண்டும். 15 நிமிடம் கழித்து சக்கையை துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, மாலை 3 நாட்கள் செய்ய நிவாரணம் பெறலாம்.

பத்து எலுமிச்சைத் தோல்களை வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து 8 ஸ்பூன் தூளுக்கு 1 ஸ்பூன் உப்புத்தூள் கலக்கி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளை எடுத்து ¼ ஸ்பூன் நல்லெண்ணெயில் குழப்பி அதை பல்துலக்கி 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இச்சிகிச்சையை செய்ய வேண்டும். வாய் நாற்றம் அகலும் வரை விளக்கிவர வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...