வாய் துர்நாற்றம் குணமாக

 எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 நிமிடம் கழித்து விழுங்க வேண்டும். காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்துவர சரியாகும்.

கரிசலாங்கன்னி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் தினம் ஒன்றாக பருப்புடன் கூட்டு செய்து மதிய உணவுடன் உண்டு வர வேண்டும். அத்துடன் தினம் ஒரு மாதுளம் பழமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர துர்நாற்றம் விலகும்.

இரண்டு எலுமிச்சை அளவு புதினா இலைகளைச் சுத்தம் செய்து அதில் 2 ஏலக்காயை நசுக்கி சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இலைகளையும் ஏலக்காய்த் தூளையும் போட்டுக்காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி ஆறியதும் வடிகட்டி இரண்டு பங்காக்கி காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் வாயில் ஊற்றி 3,4 முறை கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய துர்நாற்றம் சரியாகும்.

ஒரு அங்குல நீளமுள்ள வசம்பை இடித்துத் தூளாக்கி தூளை வாயில்போட்டு சாரத்தை கொஞ்சங் கொஞ்சமாக சப்பி விழுங்க வேண்டும். 15 நிமிடம் கழித்து சக்கையை துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, மாலை 3 நாட்கள் செய்ய நிவாரணம் பெறலாம்.

பத்து எலுமிச்சைத் தோல்களை வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து 8 ஸ்பூன் தூளுக்கு 1 ஸ்பூன் உப்புத்தூள் கலக்கி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளை எடுத்து ¼ ஸ்பூன் நல்லெண்ணெயில் குழப்பி அதை பல்துலக்கி 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இச்சிகிச்சையை செய்ய வேண்டும். வாய் நாற்றம் அகலும் வரை விளக்கிவர வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...