கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் இணை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் , இளம்வயதில் ஒருவர் ஒருமாநிலத்தின் சட்டசபை பொது தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை பலருக்கு கொடுத்து இருக்கும் வேலையில் , இதன் பின்னணியில் பாஜகபோட்ட கணக்குகளை பிரபல இளம் அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் கணக்கிட்டு கூறி இருக்கிறார் அதில்,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப் பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத்தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்து விடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக்கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..

கல்யாண(hydrabad) கர்நாடகா – கித்தூரு(mumbai) கர்நாடகா – மத்திய கர்நாடகா – காரவளி(Coastal) கர்நாடகா – தென் கர்நாடகா – பெங்களூர் என ஆறு பிரிவுகளாகவும் 31 மாவட்டங்களாகவும் கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்தமுறை ஒருங்கிணைந்த வடக்கு கர்நாடக பகுதியான கித்தூரு மற்றும் கல்யாண கர்நாடகங்களில் பாஜக தன் தொகுதிகளை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் ஒரு 50 தொகுதிகளை பாஜக வென்றால்தான் அதனால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிர்பந்தம் உள்ளது.

வடக்குகர்நாடக பகுதியில் இந்தமுறை பாஜகவை வீழ்த்துவதை கண்ணும் கருத்துமாக செய்ய சித்தராமய்யா காத்திருக்கிறார்.வடக்கு கர்நாடக பகுதியில் சித்தராமய்யாவின் செல்வாக்கு வலுவாக ஓங்கியுள்ளது.

தான் போட்டியிடும் கோலார் பகுதியில் எதிரியேஇல்லாமல் இருப்பதாலே வடக்கு கர்நாடக பகுதியில் தன் கவனத்தை முழுமையாக வைக்க முடிகிறது சித்துவால் என்கிற அரசியல் பார்வைநியாயமானது.

அதே சமயம் அங்கே பெல்காவி போன்ற மாவட்டங்களில் அண்ணாமலையின் புகழ் உச்சத்தில்உள்ளது.காரணம் தாதா பன்னஞ்ஞே ராஜாவை மொராக்கா வரை சென்று கைதுசெய்து வந்தது திரு.அண்ணாமலை அவர்கள்தான்.

மிகக்கொடூரமான,தாவூத்தின் முன்னாள் கூட்டாளியான பன்னஞ்சே ராஜாவை அவர் வேட்டையாடியதும்,பாஜக மாநிலத் தலைவரான பிறகும் அவனுக்கு எதிராக அவர் சென்றவருடம் சாட்சி சொன்னதும்கூட மக்களிடையே வெகுபிரபலம்..இப்படி நேர்மை மற்றும் வீரத்தின் அடையாளமாக அங்கே மக்களிடம் உள்ளார் திரு.அண்ணாமலை..

இந்த முறை கோலார் தொகுதியைவிட்டு சித்தராமய்யா நகரவே கூடாது என்கிற யுக்தியோடுதான் அண்ணாமலை களமிறங்குகிறார்.இதுபோல பல முக்கியமான காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள் தங்கள் தொகுதிகளைவிட்டு வெளியே வராமல் தேக்கி நிறுத்தும் யுக்தியுடனும் கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை..

எடியூரப்பாவின் வலிமையான கோட்டையான மத்திய கர்நாடகத்திலும் பாஜக தன்தொகுதிகளை தக்கவைக்க பாடுபடவேண்டும்.பெங்களூருக்குள் உள்ள 32 தொகுதிகளில் பாதிக்குபாதி தொகுதிகளை வெல்ல வேண்டும்.

கடலோர கர்நாடகம் ஹிந்துத்துவ கோட்டையாக இருந்தாலும் இந்தமுறை பல சிக்கல்களை அங்கே பாஜக சந்திக்கிறது.பாஜகவிற்கு சாதகமான பல தொகுதிகள் சில ஆயிரம் சொற்ப வாக்குகளில் அவற்றை இழக்கநேரிடும் அபாயம் உள்ளது.அண்ணாமலையின் வலிமையான செல்வாக்குள்ள பகுதிகளாக கடலோர மாவட்டங்கள் உள்ளன..

எந்த நேரமும் கலவரம் வரலாம்,அமைதியின்மை உருவாகலாம் என்றிருக்கும் கடலோர மாவட்டங்களில் மிகப்பெரியமாற்றங்களை உண்டு செய்த மக்களிடையே புகழ்பெற்றார் திரு.அண்ணாமலை.உத்தர மற்றும் தக்ஷிண கன்னட மக்களின் அன்பைபெற்றவர்.

ஆகவே,இளைஞர்கள் மத்தியில் சூழ்ந்துள்ள நம்பிக்கையின்மையை சரி செய்ய,அண்ணாமலையின் இமேஜை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே அவரை பொறுப்பாளராக ஆக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த கர்நாடகா முழுக்கவும் கட்சிசார்பற்ற இளைஞர்களையும் பாஜக பக்கம்திருப்ப வேண்டிய தேவையுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டுப் படுத்தி,இந்துத்துவ அரசியலை வளர்ச்சியோடு இணைத்துப் பேசி பிரச்சாரம்செய்ய அண்ணாமலையின் வியூகம் அங்கே தேவைப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்த வரை 200 தொகுதிகளில் ஒருசினிமா நாயகனுக்கு இருக்கும் மரியாதை அண்ணாமலைக்கு உள்ளது.காங்கிரஸிற்கு எதிராக கன்னடமொழியில் அவர் செய்யும் பிரச்சாரங்கள் மக்கள்த்தியில் எடுபடும் என்பதாலே அவரை பொறுப்பாளராக நியமிப்பதில் பாஜக மும்மரம் காட்டியது.

கர்நாடகாவில் பாஜக மீண்டும் அரியணைஏறினால் அது இனிமேல் நடக்கும் யுக்திகளையும்,பிரச்சாரங் களையும் மையப்படுத்தி மட்டுமே.அதுபோல ஒரு மாநிலத் தலைவராக குறுகிய காலத்தில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை,அதற்குள் பெரியமாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக பணி செய்வதும் அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும்..என குறிப்பிட்டு இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன் .

Post Tags:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...