அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார்

இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ஐசிஇடி) திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் என்எஸ்ஏ சல்லிவன் விளக்கினார்

இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை புதிய பதவிக்காலத்தில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று  சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விண்வெளி போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்எஸ்ஏ சல்லிவன் பிரதமரிடம் விளக்கினார்.

அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் வேகம், அளவு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்துப் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

அண்மையில் ஜி-7 உச்சிமாநாட்டில் அதிபர் பைடனுடன் தாம் நடத்திய நேர்மறையான கலந்துரையாடலைப்  பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகளாவிய நன்மைக்கு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், புதிய பதவிக்காலத்தில் அதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும்  உறுதிபூண்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...