அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார்

இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ஐசிஇடி) திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் என்எஸ்ஏ சல்லிவன் விளக்கினார்

இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை புதிய பதவிக்காலத்தில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று  சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விண்வெளி போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்எஸ்ஏ சல்லிவன் பிரதமரிடம் விளக்கினார்.

அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் வேகம், அளவு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்துப் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

அண்மையில் ஜி-7 உச்சிமாநாட்டில் அதிபர் பைடனுடன் தாம் நடத்திய நேர்மறையான கலந்துரையாடலைப்  பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகளாவிய நன்மைக்கு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், புதிய பதவிக்காலத்தில் அதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும்  உறுதிபூண்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...