இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றிய உரையாடல்

ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் இன்று (04.07.2024) தொலைபேசி உரையாடல் நடத்தினார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியதுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் பற்றியும் உரையாடியதாக பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான ராணுவக் கூட்டாண்மையில் நாம் மகத்தான மதிப்பு வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

2023, நவம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருவரும்,  ராணுவக் கூட்டாண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். 2024-ல் வெளியிடப்பட்ட தங்களின் தேசியப் பாதுகாப்பு உத்திகள் குறித்த ஆவணத்தில் உயர்நிலைப் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியாவை ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ராஜ்நாத் சிங்கிற்கு திரு ரிச்சர்ட் மார்லெஸ் வாழ்த்து தெரிவித்தார். டி-20 உலக சாம்பியனாக இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

72

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட் ...

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் -மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ  அறிவிப்பு மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு  செலவு  செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவத ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்  ரஷ்ய செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் 'இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந் ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் -மத்திய அமைச்சர் சிவராஜ் சௌகான் தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டு ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்-அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில், 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட ந ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட நாதியில்லை “முன் எப்போதும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...