தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளை சந்தித்து மோடியின் அமைதி திட்டத்தின் மூலம் உறவை மேம்படுத்த உறுதிப்பாடு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்கவும், உறவு மேம்படுத்தும் என்கின்றார்  அரசியல் நிபுணர்கள்.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மூன்று நாள் கூட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. இதில் பங்கேற்ற நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

மாநாட்டுக்கு இடையே இருவரும் இன்று தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் எல்லையில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா-சீனா உறவு இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இரு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-சீனா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, எல்லை பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புடினை அஜித் தோவல் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மோடியின் அமைதித் திட்டத்தை, அஜித் தோவல் வழங்கியுள்ளார் என்றும், அது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...