இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டினை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம். ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறை தயாராகிறது. பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு துறை முன்னோடியாக திகழ்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்படும். பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா வளர்ச்சி அடையும். படைவீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவோம். படைவீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |