மத்திய அரசு தொலைத்தொடர்பு புதிய சட்டம் சகாப்தத்தை உருவாக்கும்

மத்திய அரசு, தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் பிரிவு 6 முதல் 8 வரை, 48 மற்றும் 59 (பி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை நேற்று  (04-07-2024) வெளியிட்டது. அது நேற்று (05.07.2024) அமலுக்கு வந்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாடு தொடர்பான சட்டத்தைத் திருத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் தொலைத்தொடர்பு சட்டம் 2023 நோக்கமாகக் கொண்டுள்ளது.   தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இந்திய தந்திச்சட்டம் மற்றும் இந்திய வயர்லெஸ் தந்தி சட்டம் போன்ற சட்டக்கட்டமைப்பை ரத்து செய்யும் வகையில் இந்த தொலைத்தொடர்புச் சட்டம் 2023 அமைந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி) மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தச் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புச் சட்டம்- 2023, டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இச்சட்டம் பெற்றது.  இச்சட்டத்தின் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 ஆகியவை பிரிவுகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளன.

இன்று (ஜூலை 05, 2024) முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பிரிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*அலைக்கற்றைகளை உகந்த முறையில் பயன்படுத்துதல்

*தொலைத்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் உபகரணங்களை பயன்படுத்த தடை

*டிராய் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான வரைமுறைகள்

ஆகியவை தொடர்பான விதிமுறைகள் இந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...