உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும் இந்தியா விரைந்து வளர்ச்சியடைகிறது

2023-24 –ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும்  இந்தியா விரைந்து வளர்ச்சியடைவது தெரியவந்துள்ளது.

வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், தூய்மை இந்தியா, ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களும், இயக்கங்களும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.

அனைத்து மாநிலங்களுமே ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன

நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி குறியீட்டு மதிப்பீடு 2023-24 -ம் ஆண்டில் 71 ஆக உள்ளது, இது 2020-21-ம் ஆண்டில் 66 ஆகவும், 2018-ம் ஆண்டில் 57 ஆகவும் இருந்தது.

2023-24-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மதிப்பீடு குறைந்தபட்சம் 57 முதல்  அதிகபட்சம் 79 வரை உள்ளது. இது 2018-ம் ஆண்டில் இது 42 முதல் 69 வரை இருந்தது.

2018-ம் ஆண்டுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கும் இடையில், வேகமாக  வளர்ச்சியடையும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் 25 மதிப்பீடு அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் 21 மதிப்பீடும், உத்தராகண்ட் 19 மதிப்பீடும், சிக்கிம் 18 மதிப்பீடும், ஹரியானா 17 மதிப்பீடும், அசாம், திரிபுரா, பஞ்சாப் தலா 16 மதிப்பீடும், மத்தியப் பிரதேசம், ஒடிசா தலா 15 மதிப்பீடும் அதிகரித்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...