நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- அஸ்வினி வைஷ்ணவ்

நாட்டில் கடந்த  பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) ரயில்வே குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்கள் ஒரு பயணத்தை முடித்ததும், அவர்கள் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால் ஓய்வெடுக்க சிறப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே ஓய்வு அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. தற்போது இந்த அறைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து 558 ஓய்வு அறைகளும் இப்போது குளிரூட்டப்பட்டுள்ளன.

பல ஓய்வு அறைகளில், பாதத்திற்கான தசைப்பயிற்சி  வழங்கப்படுகிறது. ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

ரயில் ஓட்டுநர்கள் என்ஜின்களை இயக்குகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓட்டுநர் அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு பின்பு ரயில்களில் ஓட்டுநர் அறைகள் சிறந்த இருக்கைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 7,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் அறைகளுடன் தற்போது புதிய என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.

ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. பயணங்களுக்குப் பிறகு ஓய்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரி பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில், ரயில்வே ஆட்சேர்ப்பு அதிகரிக்கப்பட்டு, 34,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18,000 ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.

போலி தகவல்கள் மூலம் ரயில்வே குடும்பத்திற்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும். ஒட்டுமொத்த ரயில்வே குழுவும் நாட்டுக்கு சேவை செய்வதில் இணைந்து செயல்படுகிறது.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...