ரயில்களில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பொதுப்பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் ஏசி வசதி கொண்ட ஏசி1, ஏசி2 அல்லது ஏசி3 வகுப்பு பெட்டிகளை இணைப்பதற்கு பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1000 பொதுப்பெட்டிகள் ரயில்களில்இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது ரயில்வே துறை தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ஏழைகளின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்றைக்குரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரி்கக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 1000 பொதுப்பெட்டிகள் வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் 10,000 பொதுப்பெட்டிகளை கூடுதலாக தயாரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது ஏசி மூன்றாம்வகுப்பு பெட்டிகள் இணைப்பது அதிகரிக்கப்படமாட்டாது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள 1300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரி கட்டமைப்பாக திகழும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் புதுபபிக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ரூ.700-800 கோடி வரை செலவிடப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்றன. சில ரயில் நிலையங்கள் ரூ.100-200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகின்றன. இநத திட்டம் முடிவடைந்ததும், இவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கும். ரயில்வே துறை கட்டமைப்பு முழுவதையும் குறிபபாக ரயில் நிலையங்களையும் நவீன மயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,”என்றார்.

நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் அதிகஅளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...