பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போயுள்ளதையே காட்டுகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், போலீசாரும், மாநில அரசு நிர்வாகமும் சேர்ந்து ஏதோ ஒன்றை மறைக்க முயல்கின்றனர். காரணம், படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் ரவுடிகள் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, கைவிலங்கு மாட்டித்தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனாலும், ஒரு ரவுடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.
எந்த ஒரு காரணத்திற்காகவும், போலீசார் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. குற்ற சம்பவத்தை விசாரித்து நீதி வழங்க சட்டம், நீதிமன்றம் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் ரவுடி திருவேங்கடம் கையில் விலங்கு போட்டிருந்தால், அவர் எப்படி போலீசாரை நோக்கி சுட்டிருக்கவோ, தாக்கியிருக்கவோ முடியும்? ஏதோ ஒன்றை மறைக்கவே ரவுடி திருவேங்கடம் திட்டமிட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அந்த விசாரணை நடந்தால் தான், இந்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும்.
எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |