மாநில சிறப்பு செயற்குழு திமுக அரசைக்கண்டித்து தீர்மானங்கள்

பாஜக மாநில சிறப்புசெயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசைக்கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

தமிழக பாஜக மேலிடபொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைபொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 4000-க்கும் மேற்பட்ட கட்சிநிர்வாகிகளும் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பாஜக செயற்குழு கூட்டத்தில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், மறைந்த பாஜக உறுப்பினர்கள், பங்காரு அடிகளார், எம் எஸ் சுவாமிநாதன், இளையராஜாவின் மகள் பவதாரணி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் மறைவுக்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இந்தசெயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு நடைபெறும் முதல் சிறப்பு செயற்குழு கூட்டம் என்பதால், இந்தக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள். கட்சியின் செயல்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...