இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் அழைப்பார்கள். சோற்றுக்கற்றாழை மடலைக் குறுக்கில் அறிய பால் மஞ்சள் நிறமாக வடியும். இது உறைந்தவுடன் கெட்டியாகவும், கருத்த நிறத்துடன் கெட்டியாகவும் காணப்படும். சூரிய வெப்பத்தில் இது சிவப்பாகத் தெரியும். இதனால் இதற்கு இரத்தபோளம் எனப் பெயர் வழங்கும்.
கீழே விழுந்து அடிபட்டு இரத்தம் கட்டி வலி இருந்தால் அதன்மேல் பற்றுப் போட, அதிக நோயுடன் வீங்குகின்ற வீக்கமும், எழுந்து, நிமிர்ந்து நிற்கமுடியாத பக்க நோயும், மார்பின் உபத்திரமும் நீங்கும். இதை நீரில் கலந்து கொதிக்க வைத்து மேற்கண்ட நோய்களுக்கும், வீக்கங்களுக்கும் பற்றிட மிகத்துரிதமாக நோய் குறையும்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.