இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் அழைப்பார்கள். சோற்றுக்கற்றாழை மடலைக் குறுக்கில் அறிய பால் மஞ்சள் நிறமாக வடியும். இது உறைந்தவுடன் கெட்டியாகவும், கருத்த நிறத்துடன் கெட்டியாகவும் காணப்படும். சூரிய வெப்பத்தில் இது சிவப்பாகத் தெரியும். இதனால் இதற்கு இரத்தபோளம் எனப் பெயர் வழங்கும்.
கீழே விழுந்து அடிபட்டு இரத்தம் கட்டி வலி இருந்தால் அதன்மேல் பற்றுப் போட, அதிக நோயுடன் வீங்குகின்ற வீக்கமும், எழுந்து, நிமிர்ந்து நிற்கமுடியாத பக்க நோயும், மார்பின் உபத்திரமும் நீங்கும். இதை நீரில் கலந்து கொதிக்க வைத்து மேற்கண்ட நோய்களுக்கும், வீக்கங்களுக்கும் பற்றிட மிகத்துரிதமாக நோய் குறையும்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.