அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து

 ”ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது,” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனைப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவு பகடேவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது:

முன்பெல்லாம் அரசியல் என்றால், சமூக சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றாலே அதிகார அரசியல் தான் என அர்த்தமாகி விட்டது.

ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றிய போது பல தடைகளை எதிர்கொண்டோம். அப்போது அங்கீகாரம் இருக்காது. எங்களது பேரணி மீது கற்களை வீசி தாக்குவர். அவசர நிலை காலத்திற்கு முன்பு நாங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ ரிக்சாவிற்கு தீவைத்தனர்.

தற்போது ஆயிரக்ணக்கான மக்கள் எங்களது பேச்சை கவனிக்கின்றனர். இந்த புகழுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. ஹரிபாவு போன்ற தொண்டர்கள் தான் காரணம். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து எதுவும் கிடைக்காத நிலையிலும், நன்றாக உழைப்பவரே சிறந்த கட்சி தொண்டர். இவ்வாறு கட்கரி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...