பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவுக்கு இந்தியா உதவி

ஆசிய நாடான மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலம். கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், முகமது முய்சு வெற்றி பெற்றார்.

தீவிர சீன ஆதரவாளரான இவர், துவக்கத்திலேயே இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்தியாவை வெளியேற்றுவோம் என்று கூறியே தேர்தலை சந்தித்தார்.

அதிபரான பின், தங்கள் நாட்டில் உள்ள இந்திய படைகளை விலக்கிக் கொள்ளும்படி அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு மற்றும் மனிதநேய உதவிக்காக நிறுத்தப்பட்ட நம் வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இதற்கிடையே, சுற்றுலா தொடர்பாக, நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் அந்த நாட்டின் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வந்தார்.

தற்போது மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. முக்கியமாக வருவாயை ஈட்டி தந்த சுற்றுலா பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால், முகமது முய்சு நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டது.

கடந்தாண்டு இறுதியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று, இந்தியா வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, ஐந்து நாள் அரசு முறை பயணமாக முகமது முய்சு இந்தியா வந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளை மீண்டும் மேம்படுத்துவது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ரூபே கார்டுகளை மாலத்தீவில் பயன்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தியா உதவியுடன் மாலத்தீவின் ஹனிமாது சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமானப் பாதையையும் இரு தலைவர்கள் துவக்கி வைத்தனர்.

எக்சிம் வங்கியின் வாயிலாக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், ஹுல்ஹுமாலேயில் கட்டப்பட்ட, 700 வீடுகளும் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய பெருங்கடலில் முக்கியமான இடத்தில் மாலத்தீவு அமைந்துள்ளது. இதனால், சீனா அந்த நாட்டை தன் வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை முறியடிக்கும் வகையில், மாலத்தீவுகளுக்கு பல்வேறு திட்டங்களை, உதவிகளை பிரதமர் மோடி அறிவித்தார்.

 அந்த நாட்டில் பல துறைமுகங்கள், விமான நிலையங்கள் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கான தொலைநோக்கு திட்டம் என்ற ஆவணமும் வெளியிடப்பட்டது.

 பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மாலத்தீவுக்கு, 3,359 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

 கரன்சி ஸ்வாப் திட்டத்தின்கீழ், 3,000 கோடி ரூபாய் உதவி வழங்கப்பட உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சிக்கு பதிலாக மற்றொரு கரன்சி வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட பரிமாற்றத் தொகையில் கடனைத் திருப்பி தருவதே, கரன்சி ஸ்வாப் ஆகும். இது, மாலத்தீவுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.