மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு

மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் என்பது நமது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். மாலத்தீவு, தேசிய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான எங்கள் ஒத்துழைப்பைத் தொடருவோம். வரும் காலத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவுகள் UPI மூலம் இணைக்கப்படும். பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம்.

மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதில், நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். மாலத்தீவு உடன் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது.

இந்தியா மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு. நமது அண்டை நாட்டு கொள்கையில் மாலத்தீவு முக்கிய இடம் வகிக்கிறது. மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...