இந்தியா – யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.- ஜெய்சங்கர்

நிதி சார்ந்த தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா – யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிம்பயாசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலையின் கிளையை துபாயில் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா – யு.ஏ.இ., உறவு இன்றைக்கு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த, 2015ல் பிரதமர் மோடி யு.ஏ.இ., வந்தார். இந்த நுாற்றாண்டில் இந்திய பிரதமர் யு.ஏ.இ., வருவது இதுவே முதல்முறை. அந்த பயணத்தின் வாயிலாக, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவு வேகம் எடுத்தது.

உலகளாவிய பணியிடத்துக்கு இந்தியா இன்று தயாராக வேண்டும். அதே நேரத்தில், ‘சிப்’கள் தயாரிப்பு, மின்னணு வாகன போக்குவரத்து, சுத்தமான பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் சாதிக்க தயாராகி வருகிறது. இந்த சாத்தியக்கூறுகளின் வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதன் வாயிலாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...