மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் நாடாளு மன்றத்தை முடக்கமுயற்சி செய்கின்றனர் என்று பிரதமர்  கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவை ஒத்திவைக்கப் பட்டது. மதியம் 12 மணிக்கு கூடிய பிறகும், அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதற்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா அனுமதி வழங்கவில்லை. இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால், நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியதும், அதானி விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கரை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ‘‘அவையின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்’’ என்று ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தினார். இதற்கு பதில்அளித்த கார்கே, ‘‘54 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு நீங்கள் அறிவுரைகூற தேவையில்லை. உங்களுக்கு உரியமதிப்பு, மரியாதை அளித்து வருகிறேன். ஆனால், நீங்கள் எதிர்மறையாக பேசிவருகிறீர்கள்’’ என்றார்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்திவைக்கபட்டது. மீண்டும் கூடியபோதும், அதானி விவகாரம், சம்பல்கலவரம், மணிப்பூர் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். தொடர்அமளி காரணமாக மாநிலங்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: 2024-ம் ஆண்டு நிறைவடைய உள்ளது. 2025-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்க காத்திருக்கிறோம். 75-வது ஆண்டு அரசியலமைப்பு தினகொண்டாட்டத்தை தொடங்க உள்ளோம். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இங்கு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் பொறுப்புடன் செயல்படுகின்றனர். இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிலர் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிசெய்கின்றனர். சுமார் 90 முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர். ஜனநாயகத்தை அவர்கள் மதிக்கவில்லை. மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். தக்க சமயம் வரும்போது தண்டிக்கின்றனர், நிராகரிக்கின்றனர்.

புதிய எம்.பி.க்கள் புதிய சிந்தனைகளுடன் நாடாளுமன்றத்தில் பேச ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களை பேசவிடாமல் சிலர் தடுக்கின்றனர். இது வருத்தம் அளிக்கிறது. அனைத்து கட்சிகளிலும் புதிய எம்.பி.க்கள் பேசவாய்ப்பு தர வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் பாரதத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது. பாரதத்தின் பெருமை, கண்ணியத்தைகாக்க வேண்டியது எம்.பி.க்களின் கடமை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது. இதில் வக்புவாரிய திருத்த மசோதா உட்பட 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு தின கொண்டாட்டம் காரணமாக, மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் இன்று நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...