ஜெக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது – கிரண் ரஜிஜு

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்க மறுப்பதால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் அவையின் செயலாளரிடம் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினார். சுமார் 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்த அதில், “அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அவைத் தலைவரின் கண்ணியத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அவரை நாங்கள் பாதுகாப்போம். அவைத் தலைவரை மதிக்காவிட்டால் உறுப்பினராக இருப்பதற்கு உங்களுக்கு (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) உரிமை இல்லை. நாம் பதவியேற்கும்போது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். ஆனால் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள். இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கடினம். ஏழைகளின் நலன் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து அவர் அடிக்கடி பேசுவார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் என்ற நாடகத்தை அனுமதிக்க முடியாது. ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...