ஜெக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது – கிரண் ரஜிஜு

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்க மறுப்பதால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் அவையின் செயலாளரிடம் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினார். சுமார் 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்த அதில், “அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அவைத் தலைவரின் கண்ணியத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அவரை நாங்கள் பாதுகாப்போம். அவைத் தலைவரை மதிக்காவிட்டால் உறுப்பினராக இருப்பதற்கு உங்களுக்கு (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) உரிமை இல்லை. நாம் பதவியேற்கும்போது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். ஆனால் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள். இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கடினம். ஏழைகளின் நலன் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து அவர் அடிக்கடி பேசுவார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் என்ற நாடகத்தை அனுமதிக்க முடியாது. ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...