மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி

தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்குவீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவுவங்கி அருகே நிறைவு செய்தார்.

இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, “தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாத யாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. அதுவும் கார்த்திகை தீபதிருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்புவாய்ந்தது.தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்தபணியும் முறையாக நடைபெறவில்லை. மிகமோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்துசெய்துள்ளது.

நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்த வில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ்  போட்ட ஒரேஅரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம்கோடிக்கு மேல் நிதிவழங்கி உள்ளது.ஆனால் எந்த திட்டங்களும் தஞ்சையில் முறையாக நடைபெற வில்லை. மேலும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உதான் திட்டத்தின்கீழ் தஞ்சாவூரின் விமான நிலையத்தில் இருந்து 20 இருக்கைகள் கொண்ட சிரியரக விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்பி தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் பாஜக உறுப்பினரை தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச்செய்ய மக்கள் முன்வர வேண்டும். டெல்டா பகுதியில் குறிப்பாக எங்களுக்கு சிறப்புகவனம் உள்ளது, காரணம் இந்தியா உணவு உற்பத்தி செய்யவேண்டிய நாடாகத்தான் இருக்க வேண்டும். கையேந்தகூடிய நாடாக மாறக் கூடாது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யார் அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்போகிறோம் என்று தான் போட்டி உள்ளது” என பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...