மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி

தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்குவீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவுவங்கி அருகே நிறைவு செய்தார்.

இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, “தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாத யாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. அதுவும் கார்த்திகை தீபதிருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்புவாய்ந்தது.தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்தபணியும் முறையாக நடைபெறவில்லை. மிகமோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்துசெய்துள்ளது.

நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்த வில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ்  போட்ட ஒரேஅரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம்கோடிக்கு மேல் நிதிவழங்கி உள்ளது.ஆனால் எந்த திட்டங்களும் தஞ்சையில் முறையாக நடைபெற வில்லை. மேலும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உதான் திட்டத்தின்கீழ் தஞ்சாவூரின் விமான நிலையத்தில் இருந்து 20 இருக்கைகள் கொண்ட சிரியரக விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

எம்பி தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் பாஜக உறுப்பினரை தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச்செய்ய மக்கள் முன்வர வேண்டும். டெல்டா பகுதியில் குறிப்பாக எங்களுக்கு சிறப்புகவனம் உள்ளது, காரணம் இந்தியா உணவு உற்பத்தி செய்யவேண்டிய நாடாகத்தான் இருக்க வேண்டும். கையேந்தகூடிய நாடாக மாறக் கூடாது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யார் அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்போகிறோம் என்று தான் போட்டி உள்ளது” என பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...