அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தியது காங்கிரஸ் தான் – கிரண் ரிஜிஜூ

”அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ், அதன் ஆன்மாவையும், முகப்புரையையும் மாற்றியது,” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

லோக்சபாவில் அரசியலமைப்பு சட்ட விவாதத்தில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு மீது நீங்கள் தான் தாக்குதல் நடத்தினீர்கள். அதன் முகப்புரையையும், ஆன்மாவையும் மாற்றினீர்கள்.

பாகிஸ்தானின் நிலை என்ன எனபதும், வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆப்கனில் சீக்கியர்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை எழும்போது, அவர்கள் அடைக்கலம் தேடி வரும் முதல் நாடு இந்தியா

அப்படி இருக்கையில் நீங்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என எப்படி சொல்கிறீர்கள். சிறுபான்மை இன மக்களுக்கு இந்தியா சம ஓட்டு உரிமை வழங்கிய நிலையில், சிலர் அவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என சொல்கின்றனர். நமது வார்த்தைகளும், செயல்களும், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது.

சிறுபான்மையினருக்கு இந்தியா உரிமை வழங்கியதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கையையும் எடுத்து உள்ளது. அவர்களை பாதுகாக்க முந்தைய அரசுகளும் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதில் காங்கிரசின் பங்கை குறைத்து மதிப்பிடவில்லை.

அம்பேத்கரைப் பற்றி காங்கிரசார் அதிகம் பேசுகின்றனர். ஆனால், அவருக்கு உங்களது ஆட்சி காலத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. 1956க்கு பிறகு முன்னாள் பிரதமர் நேருவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இந்திரா தனக்கு தானே பாரத ரத்னா விருதை கொடுத்தார். காங்கிரசை தோற்கடித்து பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்த வி.பி.சிங், பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்காதது ஏன் என அக்கட்சியினர் விளக்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...