நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை மகாகவி பாரதியார் – பிரதமர் மோடி

”நுாற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமையான மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் எண்ணங்கள், நம்மை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன,” என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமி சார்பில், பாரதியார் படைப்புகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.

டில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ள ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற நுாலை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான, ‘அல்லயன்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நுாலில், பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.

பாரதியின் படைப்பு தொகுப்பை வெளியிட்டு மோடி பேசியதாவது: மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை நாடு கொண்டாடுகிறது. நான் அவரை பக்தியுடன் வணங்குகிறேன். அவரது மரபுக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதியின் படைப்புகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நாட்டின் தேவைகளை மனதில் வைத்து பாடுபட்ட சிறந்த சிந்தனையாளர் சுப்ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசாலமானது. அந்த காலக்கட்டத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து திசைகளிலும் பாரதி பணியாற்றினார்.

அதேசமயம், எதிர்காலத்தில் நிகழ இருக்கும் விஷயங்களையும் முன்கூட்டியே கணித்து, அவற்றை தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். நம் நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் பாரதியின் தொலைநோக்கு பார்வை தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமை, நுாற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது.

அவருடைய சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை எல்லாரையும் ஆச்சரியப்படுத்துகின்றன. பாரதியின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...