ரூ433 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியா மாறும் – பிரதமர் மோடி

”நம் நாடு, 433 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில் நேற்று நடந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழி கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 2014 முதல், 3 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்தவும், ஐந்து சிறப்பு மையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாடு, 329 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறி உள்ளது. இது, 433 லட்சம் கோடி ரூபாயாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

திறன் மேம்பாடு, திறமை வளர்ப்பு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த துறைகளில் அதிக முதலீடு அவசியம்.

‘மக்களின் முதலீடு’ என்ற தொலைநோக்குப் பார்வை, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய மூன்று துாண்களில் நிற்கிறது.

இந்த துறைகளில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து பங்குதாரர்களும் உதவ வேண்டும். சுற்றுலாவை மையமாக வைத்து, நாடு முழுதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு உட்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, சுற்றுலாவை எளிதாக்கி உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...