”நம் நாடு, 433 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழி கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 2014 முதல், 3 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்தவும், ஐந்து சிறப்பு மையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நம் நாடு, 329 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறி உள்ளது. இது, 433 லட்சம் கோடி ரூபாயாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
திறன் மேம்பாடு, திறமை வளர்ப்பு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த துறைகளில் அதிக முதலீடு அவசியம்.
‘மக்களின் முதலீடு’ என்ற தொலைநோக்குப் பார்வை, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய மூன்று துாண்களில் நிற்கிறது.
இந்த துறைகளில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து பங்குதாரர்களும் உதவ வேண்டும். சுற்றுலாவை மையமாக வைத்து, நாடு முழுதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு உட்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, சுற்றுலாவை எளிதாக்கி உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |