”இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது” என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் தெவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் பரம்பரை அறங்காவலர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி கூறியதாவது: இன்று, இந்தியா தனது வலிமையை நிரூபித்துள்ளது. அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.
மேலும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன். நாட்டு மக்களின் கவலையை புரிந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம். நமது கலாசாரத்தில் சிந்தூருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இன்று, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து பழிவாங்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் பிராங்கி மஹாலி கூறியதாவது: இந்திய ராணுவப் படைகளுக்கு நான் வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, நாடு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது, அனைவரும் பொருத்தமான பதிலடிக்கு காத்திருந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்திய விதத்தைப் பார்த்து, ராணுவத்தை வாழ்த்துகிறேன். பயங்கரவாதம் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், என்றார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |